ஜேர்மனி - பிரான்ஸ் உட்பட மூன்று முக்கிய நாடுகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!
ஜேர்மனி பிரான்ஸ் இத்தாலி ஆகிய நாடுகள் அஸ்டிராஜெனேகாவின் தடுப்பூசியை பயன்படுத்துவதை இடைநிறுத்தியுள்ளன.
ஐரோப்பாவில் குருதி உறைதல் தொடர்பான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதை தொடர்ந்தே ஜேர்மனி பிரான்ஸ் இத்தாலி ஆகிய நாடுகள் அஸ்டிராஜெனேகாவின் தடுப்பூசியை பயன்படுத்துவதை இடைநிறுத்தியுள்ளன.
அஸ்டிரா ஜெனேகாவின் தடுப்பூசியை பயன்படுத்துவதை உடனடியாக இடைநிறுத்துவதாக ஜேர்மனியின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தடுப்பு மருந்து குறித்த நாட்டின் அதிகார சபையின் ஆலோசனையை தொடர்ந்தே இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து பிரான்சும் தடுப்பூசியை இடைநிறுத்துகின்றது என பிரான்சின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இத்தாலியும் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.