சிதையும் நிலையில் ஆப்கானின் வங்கி கட்டமைப்பு!
ஆப்கானிஸ்தானில் உள்ள வங்கிகளில் பணத்தை திரும்ப எடுப்பது மட்டுமே இடம்பெறும் நிலையில், சிதையும் நிலையில் ஆப்கானின் வங்கி கட்டமைப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு பிற வங்கி சேவைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் ஆப்கான் இஸ்லாமிய வங்கியின் தலைமை செயல் அதிகாரி சையது மூசா கலீம் அல்-ஃபலாகி தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் இடையே நிலவும் அச்ச உணர்வு காரணமாக ஆப்கானிஸ்தானின் நீதித்துறை இருப்புக்காக போராட வேண்டிய நெருக்கடியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வங்கிகளில் பணத்தை சேமித்து வைத்துள்ளவர்கள் பெருமளவில் தற்போது பணத்தை திரும்ப எடுத்து வருகிறார்கள் என்றும், ஆப்கானிஸ்தான் வங்கி கட்டமைப்பே கிட்டத்தட்ட சிதையும் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தாலிபன்கள் ஒகஸ்ட் மாதத்தில் கைப்பற்றியிருந்தனர்.
எனினும் அதற்கு முன்பே ஆப்கான் பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.