தாலிபன் ஆட்சியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வர்த்தகம்

By Fathima Dec 13, 2021 06:52 AM GMT
Fathima

Fathima

Report
Courtesy: BBC Tamil

தென் ஆப்கானிஸ்தானின் ஊரகப்பகுதியில் அமைந்துள்ள ஓர் சிறிய அறையில் குவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளில் போதைப் பொருட்கள் மின்னுகின்றன.

அவை, ஏற்றுமதி செய்யத்தக்க தரத்திலான மெத்தாம்பெட்டமின் (methamphetamine). அவை ஆஸ்திரேலியா வரையுள்ள நாடுகளுக்குக் கடத்தப்படும். அதன்பின்னர், இந்த அறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 100 கிலோகிராம் மதிப்பிலான மெத்தாம்பெட்டமின், சுமார் 2 மில்லியன் யூரோ ($2.6 மில்லியன்) மதிப்புடையது.

அறைக்கு வெளியே, இரண்டு பேரல்களிலிருந்து புகை வெளியேறுகிறது. அதில் புதிய மெத் போதைப்பொருள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் போதைப்பொருள் வர்த்தகம் மிகப்பெரியது. தாலிபன் ஆட்சியில் அது இன்னும் அதிகரித்துள்ளது. ஹெராயின் போதைப்பொருளுடன் பல காலமாக தொடர்பு கொண்டுள்ளது ஆப்கானிஸ்தான். ஆனால், சமீப ஆண்டுகளாக, மற்றொரு ஆபத்து மிகுந்த அடிமைப்படுத்தும் கிரிஸ்டல் மெத் (crystal meth) எனப்படும் போதைப்பொருளை உற்பத்தி செய்யும் முக்கிய உற்பத்தியாளராக ஆப்கானிஸ்தான் வளர்ந்துள்ளது.

இந்த போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய, தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத ஒருவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானின் தென்மேற்கில் அமைந்துள்ள நகரத்தில், கிட்டத்தட்ட 500 தற்காலிக ஆலைகள் மூலம், தினந்தோறும் சுமார் 3,000 கிலோகிராம் கிரிஸ்டல் மெத் தயாரிக்கப்படுகிறது.

இதன் உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளான எபெட்ரினைத் (ephedrine), தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும், உள்ளூரில் ஓமன் (oman) என அழைக்கப்படும் ஒரு பொதுவான காட்டு மூலிகை கண்டறியப்பட்டதிலிருந்து, மெத் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது.

ஆப்கானிஸ்தான் மெத் வர்த்தகத்தின் மையப்புள்ளியாக செயல்படும், பாலைவனத்திலிருந்து மிக நீண்ட தொலைவில் அமைந்துள்ள சந்தையில் குவியல்குவியலாக, முன்னெப்போதும் காணாத அளவுக்கு இந்த மூலிகை விற்பனை செய்யப்படுகிறது.

முன்பு, எபெட்ரா விற்பனை மீது வரிவிதிக்க தாலிபன் முடிவு செய்தனர். ஆனால், சமீபத்தில் பரவலாக விளம்பரப்படுத்தப்படாத ஒரு ஆணையில், அதன் சாகுபடிக்குத் தடை விதித்தனர்.

அந்த சமயத்தில், மெத் உற்பத்தி ஆலைகள் தொடர்ந்து செயல்பட அவர்கள் அனுமதித்தனர். இந்த போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஆப்கானியர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், எபெட்ராவைத் தடை செய்ததன் காரணமாக, எதிர்காலத்தில் உற்பத்தி செய்ய ஆலைகளில் மூலிகைகள் இருந்தபோதிலும், மெத் போதைப்பொருளின் மொத்தவிலை ஒரே இரவில் இரட்டிப்பாகியது என்பதுதான் நகைப்புக்குரியது.

ஆப்கானிஸ்தான் போதைப்பொருள் வர்த்தகம் குறித்த முன்னணி நிபுணர் டாக்டர் டேவிட் மேன்ஸ்பீல்ட், போதைப்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஆலைகளை அடையாளம் காணும் செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன், மெத் உற்பத்தியின் வளர்ச்சியைக் கண்காணித்துள்ளார்.

எபெட்ராவைத் தயாரிப்பதற்கான மூலிகை முழுமையாக சேகரிக்கப்பட்ட சமயத்தில், அதன் மீது தடை விதிக்கப்பட்டதால், "அடுத்தாண்டு ஜூலை மாதம் எபெட்ரா மீண்டும் அறுவடைக்கு வரும் வரை, தடை விதிக்கப்பட்டதன் உண்மையான விளைவை உணர முடியாது" என்றார்.

ஆப்கானிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் மெத்தின் அளவு, அந்நாட்டில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் மற்ற போதைப்பொருளான ஹெராயினின் அளவை விட அதிகமாக இருக்கும் என, டாக்டர் மேன்ஸ்பீல்ட் நம்புகிறார்.

ஆப்கானிஸ்தானின் பாப்பி செடிகளிலிருந்து அறுவடை செய்யப்படும் ஓபியம் போதைப்பொருள், உலகளவில் உற்பத்தி செய்யப்படும் போதைப்பொருளின் அளவில் 80 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வரும் வாரங்களில், ஆப்கானிஸ்தான் முழுவதிலும் உள்ள விவசாயிகள், தங்கள் நிலங்களை தயார்செய்து, ஓபியம் விதைகளை விதைக்கும் வேலைகளில் பரபரப்பாக காணப்படுவார்கள். "இது ஆபத்தானது என எங்களுக்குத் தெரியும்," என, கந்தஹார் நகருக்கு வெளியே உள்ள நிலத்தை சுத்தப்படுத்திக்கொண்டே கூறுகிறார், முகமது கனி. " ஆனால், வேறு எதையும் விளைவிப்பது வருமானத்தைத் தராது" என்கிறார்.

தாலிபன்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் சென்றபிறகு, அந்நாட்டுக்கான சர்வதேச ஆதரவு விலக்கிக்கொள்ளப்பட்டதால், ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது. அதனால், பெரும்பாலான விவசாயிகளுக்கு ஓபியமே பாதுகாப்பான தேர்வாக உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் சரிவு, அதிகரிக்கும் வறட்சி ஆகியவற்றின் காரணமாகவும் இந்நிலையை நோக்கித் தள்ளப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

"நாங்கள் கிணறு தோண்ட வேண்டும். வெண்டைக்காயையோ அல்லது தக்காளியையோ பயிரிட்டால், கிணறு தோண்டுவதற்கான செலவில் பாதியைக் கூட எங்களால் ஈட்ட முடியாது," என்கிறார் கானி.

ஓபியத்தை விதைப்பதற்கு தாலிபன்கள் தடை செய்யலாம் என்ற யூகம், அதன் விலை அதிகரிப்பிற்கு வழிவகுத்தது. விலை உயர்வின் காரணமாக, அதனை அதிகம் பயிரிட ஊக்குவிக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தற்போது, இந்த வணிகம் செழித்து வளர்கிறது. ஊழல்மிக்க அரசு அதிகாரிகளுக்கு பணத்தையும், அடர்த்தியான கருப்பு பேஸ்ட் வடிவத்தில் போதைப்பொருள் அடங்கிய பைகளை ரகசியமாகவும் விற்ற ஓபியம் விற்பனையாளர்கள், இப்போது சந்தைகளில் இதற்காக கடைகளை அமைத்துள்ளனர்.

"இந்த நாட்டை தாலிபன்கள் சுதந்திரமாக்கியுள்ளதால், நாங்கள் மொத்தமாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளோம்," என சிரித்துக்கொண்டே கூறுகிறார், மொத்த விற்பனையாளர் ஒருவர்.

இருப்பினும், தாலிபன்கள் இந்த வணிகம் குறித்து இன்னும் உணர்வு மிக்கவர்களாகவே உள்ளனர். ஹெல்மெண்ட் மாகாணத்தில், பெரிய, இழிந்த நிலையில் உள்ள ஓபிய சந்தை குறித்து பிபிசி ஒளிப்பதிவு செய்வதற்கு, அது "தடை செய்யப்பட்ட பகுதி" எனக்கூறி தடுத்துவிட்டனர்.

சில தாலிபன் உறுப்பினர்கள், போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஆதாயம் பெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே, ஊடகத்தை அனுமதிக்கத் தடை விதிக்கப்பட்டதா என கேள்வியெழுப்பியபோது, மாகாண கலாச்சார ஆணையத்தின் தலைவர் ஹபீஸ் ரஷீத் பேட்டியை திடீரென முடித்துக்கொண்டார். காணொளி பதிவுகளை அழிக்காவிட்டால், கேமராவை அடித்து நொறுக்கிவிடுவோம் எனவும் அச்சுறுத்தினார்.

கந்தஹாருக்கு அருகாமையில் உள்ள ஓபியம் சந்தையை படம்பிடிக்க எங்களுக்கு ஆரம்பத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சென்றவுடன், இது சாத்தியமில்லை என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

தாலிபன்கள் முதன்முதலில் ஆட்சியில் இருந்தபோது, ஓபியத்தைத் தடை செய்தனர். ஆனால், அதன்பின் அவர்கள் கிளர்ச்சியாளர்களாக இருந்தபோது, அதன்மீதான வரி, அவர்களின் வருவாய் ஆதாரமாக இருந்தது. எனினும், இதனை அவர்கள் பொதுவெளியில் மறைக்கின்றனர்.

காபூலின் தாலிபன் செய்தித்தொடர்பாளர் பிலால் கரிமி பிபிசியிடம் கூறுகையில், "விவசாயிகளுக்கு மாற்றைக் கண்டறிவது குறித்து முயற்சித்து வருகிறோம். அவர்களுக்கு வேறு எதையும் அளிக்காமல், அவர்களிடமிருந்து இதை எடுக்க முடியாது," என தெரிவித்தார்.   

   "சர்வதேச சமூகம் ஆப்கன் மக்களுக்கு உதவி செய்யாத வரை, ஓபியத்தை அவர்கள் தடை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இல்லையென்றால், நாங்கள் பசியுடன் கிடப்போம், எங்களின் குடும்பத்தை எங்களால் கவனிக்க இயலாது."

உணவு மற்றும் விவசாய பொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி, விவசாயிகளும், போதைப்பொருள் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களும், தங்கள் வருமானத்தைத் தொடர்ந்து பராமரிக்க, போதைப்பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்ய வழிவகுக்கும் என, டாக்டர் மேன்ஸ்பீல்ட் எச்சரிக்கிறார்.  

ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில், போதைப் பொருள் வணிகம், உள்நாட்டுப் பொருளாதாரத்துடன் பிண்ணிப்பிணைந்துள்ளது.

ஹெல்மண்டில் நெடுந்தொலைவில் அமைந்துள்ள கிராமங்களின் தொகுப்பான கேண்டம் ரெஸ்ஸுக்கு கரடுமுரடான பாதையைக் கடந்தே செல்ல முடியும். ஆனால், இதுதான் சர்வதேச ஹெராயின் வர்த்தகத்தின் மையமாகும்.

மேலும், இங்கு அதிகளவிலான சந்தைக் கடைகள் ஓபியம் விற்பனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஹெராயின் தயாரிப்பில், 60-70 பேரைக் கொண்டு இயங்கும் பல்வேறு ஆலைகள் இங்குள்ளன. இங்கிருந்து போதைப்பொருட்கள் பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கும், மேற்கு திசையில் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலகின் மற்ற நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன.

உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், ஏற்றுமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் ஹெராயின், பாகிஸ்தான் பண மதிப்பீட்டில் 210,000 ரூபாய் (900 பவுண்ட்ஸ்; 1,190 டாலர்கள்) என்ற அளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தார்.   

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US