ஆப்கானிஸ்தானின் இந்த நிலைக்கு பாகிஸ்தான் தான் காரணம்...பாடகியின் பகிர் குற்றச்சாட்டு
தாலிபான்களின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக ஆப்கனைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி அர்யானா சயீத் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தலிபான்களுக்கும், அமெரிக்க படைகளுக்கும் இடையே நடைபெற்று வந்த சண்டை முடிவுக்கு வந்தது. இதனால் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை எளிதாக தன்வசப்படுத்தினார். ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அதிபராக இருந்த அஷரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது குறித்து அவ்வப்போது பல்வேறு புதுப் புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதும் அவசரகதியாக நாட்டை விட்டு தப்பிய பாப் பாடகி அர்யானா சயீத், ஆப்கனின் தற்போதைய நிலை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற பாடல் நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்த அர்யனா சயீத், தாலிபான்களின் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அமெரிக்க சரக்கு விமானம் மூலம் கத்தார் தப்பினார். இந்நிலையில், தாலிபான்களின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகவும், அரசாங்கத்திடம் பிடிபடும் தாலிபான்கள் எப்போதும் பாகிஸ்தானியர்களாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தாலிபான்களின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளதாகவும், அர்யானா சயீத் தெரிவித்துள்ளார்.