கனடா திரும்பும் ஆப்கானியர்களுக்கு தூதுவர் விடுத்த எச்சரிக்கை: ஆபத்தில் முடியலாம்
கனடாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் தலிபான் நிர்வாகம் தொடர்பில் ஆப்கான் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடா திரும்ப அனுமதி பெற்ற ஆப்கானியர்கள் தலிபான் நிர்வாகத்திடம் கடவுச்சீட்டு தொடர்பில் அணுகினால் கைதாக வாய்ப்புள்ளதாக கனடாவுக்கான தூதுவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவுக்கான ஆப்கான் தூதுவர் ஹசன் சொரூஷ் தெரிவிக்கையில், ஆப்கானியர்களை வீடு வீடாக சென்று தலிபான்கள் வேட்டையாடுவதாக தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி சட்டத்திற்கு புறம்பான கொலைகளும் கட்டாயம் காரணமாக தலைமறைவாவதும் தலிபான் ஆட்சியில் அதிகரித்து வருவதாக ஹசன் சொரூஷ் தெரிவித்துள்ளார்.
கனடாவுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் உதவிய ஆப்கானியர்கள் தலிபான் ஆட்சியில் கடும் அச்சுறுத்தலில் வாழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆப்கானிஸ்தானில், தலிபான்களின் கீழ் கடவுச்சீட்டு பெற விரும்புவோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு வழக்குத் தொடரும் அபாயம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, அங்கீகரிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அகதிகள் மற்றும் கனடாவை அடைய முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோருக்கான ஆவணங்கள் மீதான விதிகளை தளர்த்துமாறு ஹசன் சொரூஷ் அழைப்பு விடுத்துள்ளார்.