பூங்காவின் பாதுகாப்பு வேலியை தாண்டி குதித்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்
ஆப்பிரிக்க நாட்டு உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு வேலியை தாண்டி குதித்தவரை அங்குள்ள சிங்கம் ஒன்று கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் அக்ராவில் அந்நாட்டின் தேசிய உயிரியல் பூங்கா உள்ளது.
நேற்றுமுன்தினம் (29-08-2022) வழக்கம் போல் இந்த உயிரியல் பூங்காவுக்கு ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
அவர்கள் அங்கு பாரமரிக்கப்பட்டு வரும் விலங்குகளை ஆர்வத்துடன் பார்த்து ரசித்து கொண்டிருந்தனர்.
அப்போது சிங்கங்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு சென்ற ஒரு நபர் திடீரென வேலியை தாண்டி சிங்கங்கள் இருந்த பகுதிக்குள் குதித்தார்.
அங்கிருந்தவர்கள் அனைவரும் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உயிரியல் பூங்கா அதிகாரிகள் விரைந்து வந்து சிங்கங்களிடம் இருந்து அந்த நபரை காப்பற்ற முயன்றனர்.
ஆனால் அதற்குள் ஒரு சிங்கம் அவரை கடித்து குதறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.