20 மாதங்களுக்குப் பிறகு நாட்டின் எல்லைகளை திறக்கவுள்ள அமெரிக்கா
20 மாதங்களின் பின்னர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயணிகளுக்கான நாட்டின் எல்லைகளை திறப்பதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
உலகம் முழுவதும் நிலவி வந்த கொரோனா தொற்றுக் காரணமாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் தரும் அவர்கள் அவரது ஆட்சி காலத்தில் இந்த உத்தரவினை பிறப்பித்தார். இந்த தடையின் காரணமாக 30 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் தற்போது அந்த தடை நீக்கப்பட்டு முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது பிரித்தானியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும், சீனா, இந்தியா, தென்னாபிரிக்கா, ஈரான் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கும் கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டன.
இந்நிலையில் புதிய விதிகளின்படி, தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயணிகள், பயணத்திற்கு முன்னரான எதிர்மறையான கொரோனா சோதனையை காட்டினால் தனிமைப்படுத்தல் இன்றி நாட்டுக்குள் வருவதற்கு அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.