மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தற்போது ஐரோப்பா முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியுள்ள நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அந்த நாட்டு அரசு தரவுகளின்படி நாளாந்தம் கிட்டத்தட்ட 1,000 நோயாளிகள் கொரோனா தொற்றுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸில் சுற்றுலா மீண்டும் வளர்ந்து வரும் நிலையில் அங்கு தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியிருப்பது அந்த நாட்டு அரசை கவலையடைய செய்துள்ளது.
இருப்பினும், சுற்றுலா பயணிகளிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, அரசு எதிர்ப்பு போராட்டங்களையும் தூண்டும் என்பதால் புதிய கட்டுப்பாடுகள் எதையும் அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசு கொண்டுவரவில்லை.
அதேவேளையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு முக கவசங்களை பயன்படுத்தும்படி மக்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.