எயார் பிரான்ஸ் விமானத்தில் பணிப்பெண் மீது தாக்குதல் ; அவசரமாக தரையிறக்கம்
எயார் பிரான்ஸ் விமானத்தில் ( AF718) வைத்து பணிப்பெண் மீது தாக்குதல் நடதப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
Dakar (Senegal) நகரில் சாள்-து-கோல் விமான நிலையத்துக்கு வருகை தந்த விமானம், மீண்டும் இங்கிருந்து சனிக்கிழமை புறப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமான பணிப்பெண் ஒருவரை பயணி ஒருவர் தாக்கியதனால் விமானத்துக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பணிப்பெண் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர் மாலி நாட்டவர் எனவும் கூறப்படுகின்றது அதை அடுத்து, விமானம் உடனடியாக மீண்டும் சாள்-து-கோல் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. காவ்ல்துறையினர் அழைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.