விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் – ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்
தாய்லாந்து பூக்கட்டில் இருந்து இந்தியாவின் புதுடெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று வெடிகுண்டு மிரட்டலுக்குப் பிறகு அவசரமாக பூக்கட் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
AI 379 எனும் இந்த விமானம் இன்று காலை 9.30 மணிக்கு புறப்பட்டதுடன், அதில் 156 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விமானம் புறப்பட்ட சில மணிநேரங்களுக்குள் அந்தமான் கடல் பகுதியில் சுற்றிவந்து மீண்டும் பூக்கட்டில் தரையிறங்கியதாக விமான பயண கண்காணிப்பு இணையதளம் Flightradar24 பதிவுசெய்துள்ளது.
இந்த நிகழ்வு, நேற்று அகமதாபாத்தில் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்துக்குப் பின்னர் இடம்பெற்றுள்ளது என்பது கவலைக்கிடமான விடயமாகும்.
அந்த விபத்தில் 240 பேர் உயிரிழந்திருந்தனர். விமானத்தில் ஏற்பட்ட மிரட்டல் குறித்து ஏர்முறை அதிகாரிகள் தற்போதுவரை கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை.
ஏர் இந்தியா தரப்பிலும் இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.
கடந்த ஆண்டு முழுவதும் இந்தியாவின் விமான நிலையங்கள் மற்றும் விமானங்கள் மீது ஏராளமான போலி வெடிகுண்டு மிரட்டல்கள் செய்யப்பட்டுள்ளன.
2024ல் மட்டும் சுமார் 1,000 போலி அழைப்புகள் செய்யப்பட்டதாகப் பொது பாதுகாப்புத் தரவுகள் கூறுகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது உறுதியாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.