சந்தேகத்தை ஏற்படுத்திய விமான பயணி: சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர், விமானத்தில் இருந்தவர்களிடம் இருந்து $10,000க்கும் அதிகமான ரொக்கம் மற்றும் இரண்டு கிரெடிட் கார்டுகளை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது பியூனஸ் அயர்ஸில் இருந்து மியாமிக்கு சென்ற விமானத்தில் அரங்கேறியுள்ளது. சுமார் ஒன்பதரை மணி நேர பயணத்தில் Diego Sebastian Radio என்பவர் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளார்.
விமானம் தரையிறங்கியதும், ரேடியோவை சுற்றிவளைத்த அதிகாரிகள், அவரது பைகளை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அதில், 10,732 டொலர் ரொக்கமும், அவரது பெயரில் அல்லாத இரண்டு கிரெடிட் கார்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து பயணிகள் எவருக்கேனும் பணம் அல்லது கடன் அட்டைகள் தொலைந்து போனதாக சோதனையிட கேட்டுள்ளனர். இதில் இரு பயணிகள் முன்வந்து தங்கள் பணம் மற்றும் அட்டைகள் மாயமாகியுள்ளதை குறிப்பிட்டுள்ளனர்.
நீதிமன்ற விசாரணையிலும், குறித்த சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ரேடியோ மீது திருட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால், விமான பயணத்தில் இதுபோன்ற திருட்டு சம்பவம் சாதாரணம் என இது தொடர்பில் ஆய்வு மேற்கொண்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதிக தொகையுடன் விமான பயணம் மேற்கொள்வதாக இருந்தால், அதை உங்கள் கண்காணிப்பில் இருக்குமாறு பத்திரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.