அல்பர்ட்டா முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அல்பர்ட்டாவில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை இன்று புதன்கிழமை (09-02-2022) நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்படுதாவக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அல்பர்ட்டா மாகாண முதல்வர் ஜேசன் கென்னி (Jason Kenney) ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதியுடன் அனைத்து விதமான கொரோனா சுகாதார கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அல்பர்ட்டா மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களில் பலர் ஓமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே தொடர்ந்தும் கட்டுப்பாடுகளை விதிப்பதில் கூடுதலான நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மாகாண ரீதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் தேவையான பகுதிகளில் மாநகரசபை ரீதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என நகர நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.