கனடாவில் வரி மோசடியில் ஈடுபட்டவருக்கு சிறைத்தண்டனை
கனடாவில் வரி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அல்பேர்டா மாகாணத்தில் உள்ள ப்ரூக்ஸ் நகரைச் சேர்ந்த லெஸ்லி சாண்ட் என்பவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பெருந்தொற்று காலத்தில் பல்வேறு அரசு நிவாரணங்களை மோசடியாக பெற்றதற்கும், வருமான வரி செலுத்தாததற்கும் மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 798,709.02 டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
"Flyte Deck Corporation" என்ற ட்ரோன் விமான சேவை மற்றும் 3D அச்சுப்பதிப்புத் துறையை முன்வைத்து, சந்த் இந்நிறுவனத்தின் ஒரே பங்குதாரராகவும், கையொப்ப அதிகாரியாகவும் இருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், இந்த நிறுவனம் உண்மையில் இயங்காதது என்றும், வணிக வருமானமே இல்லாதது என்றும் கனடா வருமான வரித்துறை (CRA) தெரிவித்துள்ளது.
இருப்பினும், 2020 ஏப்ரல் முதல் 2022 ஆகஸ்ட் வரை சந்த் பல்வேறு நிவாரணத் திட்டங்களுக்கு மோசடியான முறையில் பணம் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த முறையில், பொய்யான வணிக ஆவணங்கள், வாடகை ஒப்பந்தங்கள், ஊதிய விவரங்கள், வங்கிக் கடிதங்கள் மற்றும் ஊழியர் பட்டியல்கள் ஆகியவற்றை தயாரித்து சமர்ப்பித்துள்ளார்.
இதன் மூலம் சந்த் 603,376.44 டொலர்களை தனிப்பட்ட முறையில் பெற்று, அதனை வருமானமாக தெரிவிக்காமல் தப்பித்துள்ளார்.
RCMP மற்றும் CRA இணைந்து நடத்திய விசாரணையின் பின்னர், சந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.