கனேடிய மாகாணமொன்றில் மாயமான தாயும் குழந்தையும்... உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டதால் பரபரப்பு
கனேடிய மாகாணமாக ஆல்பர்ட்டாவில், வியாழனன்று இரவு, ஒரு இளம்பெண்ணும் 16 மாதக் குழந்தையான அவரது மகளும் காணாமல் போனதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
பிறகு அவர்கள் இருவருமே உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் கொலை செய்யப்பட்டதாக கருதி பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.
இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று Hinton என்ற இடத்தில், 53 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
காணாமல் போன இளம்பெண்ணும் 16 மாதக் குழந்தையும் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அபாயம் எதுவும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.