கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் திடீர் மரணம்! கனடாவில் பரபரப்பு
கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் AstraZeneca தடுப்பூசி போட்டுக்கொண்ட 50 வயது மதிக்கத்தக்க பெண் மரணமடைந்ததாக மருத்துவ தலைமை அதிகாரி Deena Hinshaw தெரிவித்துள்ளதால் பரபரப்பானது.
மேலும் அவர் கூறுகையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் vaccine-induced immune thrombotic thrombocytopenia (VITT) என்ற பின்விளைவால் அவர் மரணமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
எனினும் தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்பை விட, கொரோனாவினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் 100,000 முதல் 250,000 டோஸ்களில் மிக அரிதாக ஒரு சிலருக்கு மட்டுமே அதிக பாதிப்புகள் ஏற்படுவதாக Deena Hinshaw தெரிவித்துள்ளார்.
அல்பெர்டா மாகாணத்தில் மட்டும் VITT பாதிப்பால் மரணமடைந்த இரண்டாவது பெண் இவர் ஆகும், 253,000 டோஸ்களில் ஒருவருக்கு மட்டுமே மரணம் வரை பாதிப்பு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரலில், தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண் ரத்த உறைவு பிரச்சனையால் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.