கனடாவில் 3 வயது சிறுமிக்காக விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை: வெளியான புகைப்படம்
கனடாவில் மூன்று வயது சிறுமி மாயமான விவகாரத்தில் ஒன்ராறியோ பொலிசார் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஒன்ராறியோவின் பாரி பகுதியில் குறித்த மூன்று வயது சிறுமி கடைசியாக காணப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tunbridge சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை மதியத்திற்கு மேல் மூன்று வயதேயான Arabella Vienneau என்ற சிறுமி கடைசியாக காணப்பட்டதாக அவரது குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமி தொடர்பில் பொலிசார் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 3 அடி உயரம் கொண்ட சிறுமி, சுமார் 30 முதல் 40 lbs எடை இருப்பார் எனவும், அவருக்கு பச்சை நிற கண்கள் எனவும் அவருக்கு பொன்னிற தலைமுடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, சிறுமியை கடத்தியவர் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குழந்தையின் பாதுகாப்பு தொடர்பில் கவலை கொள்வதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய விவகாரத்தில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என பொலிஸ் தரப்பில் கோரப்பட்டுள்ளது.