அமெரிக்காவில் கொடூரமுகம் காட்டும் கொரோனா; தினசரி இறப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது!
அமெரிக்காவில் தற்போது ஒமைக்ரானால் தூண்டப்பட்ட கொரோனா அலை நீடித்து வரும் நிலையில் தினசரி இறப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இது டெல்டாவை போன்றே இறப்புகளின் எண்ணிக்கையை அதிகமாக கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரியாக தற்போது 2 ஆயிரம் பேர் கொரோனாவால் அங்கு இறக்கிறார்கள்.
அதேவேளை கடந்த செப்டம்பரில் டெல்டா வைரஸ் தாக்குதலின்போதும் இதே அளவு இறப்பு எண்ணிக்கை இருந்தது.
அத்துடன் இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் 8 லட்சத்து 66 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
மேலும் அங்கு தற்போது ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் சேர்க்கையும் அதிகரித்து வருகிறது.