ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெற்றது தவறு-டேவிட்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெற்றது தவறு என்றும் அதற்காக ஒரு நாள் வருத்தப்பட வேண்டியது வரும் என்றும் அங்கு கூட்டுப்படை கமாண்டராக இருந்த ஜெனரல் டேவிட் பீட்டரஸ் கூறியுள்ளார்.
2011 ல் ஆப்கானிஸ்தானில் போர் உச்சத்தில் இருந்த போது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் கமாண்டராக இருந்தவர் இவர். தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் கை ஓங்கி உள்ளதால், அமெரிக்க ராணுவத்தின் உதவி இல்லாத நிலையில், ஆப்கன் படைகளால் ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தாலிபன்களை விட்டு விட்டு ஓடிவிடவோ அல்லது சரண்டையவோ மட்டுமே வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.இனி அல் கொய்தா, ஐஎஸ் அமைப்புகள் மீண்டும் தலை தூக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.