அமெரிக்காவில் மளிகை கடைக்குள் புகுந்து மர்ம நபர் அரங்கேற்றிய கொடூரம்!
அமெரிக்காவில் மளிகை கடைக்குள் புகுந்து மர்ம நபர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள மளிகை கடை ஒன்றிற்குள் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து தெரியவருவது, திடீரென புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இச்சம்பவத்தில் கடைக்குள்ளேயே ஒருவர் உயிரிழந்து உள்ளார். மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கடைக்கு வந்த பொலிஸார் அவரை மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
குறித்த துப்பாக்கி சூடு நடத்திய நபர் தப்பியோடி விட்டார். அவர் தாக்குதல் நடத்தியதற்கான காரணம் பற்றி தெரியவரவில்லை. இதுபற்றிய விசாரணை நடந்து வருகிறது.