இனி துணி மூலம் சுவாசிக்கலாம்! அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் பிரமாத கண்டுபிடிப்பு
அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்கள் ஒன்று சேர்ந்து ஆக்சிஜன் அளிக்கும் துணியை கண்டுபிடித்தது மக்கள் மத்தியில் பல பாராட்டுகளை குவித்து வருகின்றது.
கடந்த ஆண்டு தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. கொரோனாவை அழிக்கும் ஆயுதமாய் தடுப்பூசி செயல்பட்டு வருகின்றது. இதனால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மிக மும்முரமாக நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சில நாட்டில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவியது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் மூச்சு திணறி உயிர் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களுக்கு உடனடியாக ஆக்சிஜன் கிடைக்கும் வகையில் புதிய பைபர் துணி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பைபர் துணியிலிருந்து உடலின் தேவைக்கு ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளலாம். விளையாட்டு வீரர்கள், மேடையில் நடனமாடுபவர்களுக்கு உதவிகரமாக இந்த ஆக்சிஜன் துணி உதவியாக இருக்கும்.
இந்த துணியை அணிந்து கொண்டால் உடலுக்கு நேரடியாக ஆக்சிஜன் செல்லும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அமெரிக்க ஆராய்ச்சியார்களின் பிரமாத கண்டுபிடிப்புக்கு பல திசைகளில் இருந்து பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.