ஓடும் ரயிலில் சினிமா பாணியில் சாகசம் செய்த இருவருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
கனடாவில் ஓடும் ரயிலின் கூரையின் மீது ஏறி சினிமா பாணியில் சாகசங்களை செய்த காணொளியொன்று வைரலாகியுள்ளது.
கடந்த 1ம் திகதி இந்த காணொளி யூடியுப்பில் வெளியிடப்பட்டுள்ளது. கனேடிய தேசிய கொடிகளைத்தாங்கிய முகமூடிகளை அணிந்த இருவர் இவ்வாறு ஓடும் ரயிலில் சாகசம் செய்துள்ளனர்.
கனேடிய தேசிய தினத்தை முன்னிட்டு அதனை கொண்டாடும் வகையில் இந்த காணொளி வெளியிடப்பட்டிருந்தது.
தேசிய தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடிய இளைஞர்களுக்கு தற்பொழுது நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு ஆபத்தான சாகசங்களை புரிந்தமை குறித்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தி குறித்த நபர்கள் தண்டிக்கப்படுவர் என கனேடிய பொதுப் போக்குவரத்து சேவையான ரீ.ரீ.சீ அறிவித்துள்ளது.
இந்த ஆபத்தான சாகசகத்தில் ஈடுபட்ட நபர்கள் பற்றிய விபரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்காப்பேராவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.