ஜேர்மன் நாடாளுமன்ற தேர்தல்: ஏஞ்சலா மெர்க்கல் கட்சி தோல்வி முகம்
ஜெர்மனியின் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில், எதிர்கட்சியாக இருந்த சமூக ஜனநாயக கூட்டணி கட்சி வெற்றியை நோக்கி முன்னோக்கி நகர்கிறது.
ஜெர்மனியின் சான்சலர் உள்ள ஏஞ்சலா மெர்க்கலின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
இதில், ஆளும் யூனியன் பிளாக் கட்சியும் இடதுசாரி சமூக ஜனநாயக கூட்டணியும் போட்டியில் உள்ளன.
தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான சமூக ஜனநாயக கட்சி 25.7% வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளது.
சான்செலர் ஏங்கலா மெர்கெலின் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது.
இன்னும் முழுமையாக வெளிவராத தேர்தல் முடிவுகளில் சமூக ஜனநாயக கூட்டணி கட்சி வெற்றியை நோக்கிச் செல்கிறது. எனினும் இந்தக் கட்சி சிறிய அளவிலேயே முன்னிலை பெற்றுள்ளது.
மெர்கலுக்கு அடுத்ததாக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் சான்செலர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ள ஆர்மின் லஷெட் தாம் ஆட்சி அமைப்பது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆனால் தங்களுக்கு ஆட்சி அமைக்க முழு ஆதரவு கிடைத்துள்ளது என்று சமூக ஜனநாயக கூட்டணி கட்சியின் ஒலாஃப் ஷோல்ட்ஸ் கூறியுள்ளார்.
மேலும் சமூக ஜனநாயக கூட்டணி கட்சி, பிற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிகளை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.