ரஷ்ய - உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட விலங்குகள்!
ரஷ்யப் படைகள் உக்ரேனிய தலைநகரில் தாக்குதல் மேற்கொள்வதால், கீவ் நகரில் உள்ள உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு மூடப்பட்டுள்ளது.
கீவ் நகர மிருகக்காட்சிசாலையில் யானைகள், ஒட்டகங்கள் மற்றும் உக்ரைனின் கொரில்லா உட்பட 200 க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த 4,000 உயிரினங்கள் உள்ளன.
அதேசமயம் ஆறு சிங்கங்கள், நான்கு புலிகள், ஒரு ஆபிரிக்க காட்டு நாய் மற்றும் ஒரு கபுச்சின் குரங்கு மீட்கப்பட்டு போலந்தில் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இது குறித்து உயிரியல் பூங்காவின் தலைவரான கைரிலோ டிரான்டின் கூறுகையில்,
"பொருத்தமான கால்நடை சேவை மற்றும் போக்குவரத்தை வழங்குவது சாத்தியமற்றதால் விலங்குகளை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இப்போதைக்கு, பத்து நாட்களுக்கு மட்டுமே எங்களிடம் உணவுப் பொருட்கள் உள்ளன. கடந்த வாரம், கீவ் நகர மிருகக்காட்சிசாலைக்கு அருகில் கடுமையான தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து சமூக ஊடகங்களில் விலங்குகளின் நல்வாழ்வு குறித்த கவலைகள் பகிரப்பட்டன. யானைகள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய விலங்குகள் வெடிப்புகள் மற்றும் நெருங்கிய குண்டுவீச்சில் இருந்து சுடும்போது அவற்றை அமைதிப்படுத்த மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது.

விலங்குகளுக்கு போர் மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதால், சில உட்புற அறைகள் மற்றும் நிலத்தடி அறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும், எங்கள் கால்நடை மருத்துவர்கள் அவற்றின் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சில உக்ரேனிய உயிரியல் பூங்காக்கள் ஏற்கனவே தங்கள் விலங்குகளை அண்டை நாடுகளுக்கு வெளியேற்றியுள்ளன. கீவ் நகர் அருகே உள்ள சேவ் வைல்ட் கரடி சரணாலயத்தில் இருந்து விலங்குகள் போலந்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
அங்கு போஸ்னனின் மிருகக்காட்சிசாலையானது அடைக்கலம் அளித்தது. வழியில் ரஷ்ய டாங்கிகளால் சூழப்பட்ட போதிலும், ஐந்து கரடிகள் கான்வாய் ஆக்கிரமிப்புக் கோடு வழியாகச் சென்று பாதுகாப்பாக தங்கள் இலக்கை அடைந்ததாக அவர் கூறினார்.
