பூஸ்டர் டோஸ் வேண்டாம்... பதிலாக இதை நடைமுறைப் படுத்த வேண்டும்: பைசர் தலைவர்
உலக நாடுகளில் கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், தடுப்பூசி நிறுவனங்கள் பூஸ்டர் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனால், தற்போது முதன்மை நாடுகள் பல பூஸ்டர் டோஸ் எனும் மூன்றாவது தடுப்பூசியை மக்களுக்கு அளித்து வருகிறது. இஸ்ரேல் நாடு 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி அளிக்க தயாராகி வருகிறது.
இந்த நிலையில், பைசர் தடுப்பூசி நிறுவன சிஇஓ ஆல்பர்ட் போர்லா தெரிவிக்கையில், 4 அல்லது 5 மாதங்களுக்கு ஒருமுறை பூஸ்டர் டோஸ் செலுத்துவது நல்லதல்ல.
இதற்குப் பதிலாக ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் தடுப்பூசியை உருவாக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மக்களும் அதைப் பின்பற்றுவர். எ
ளிதில் நினைவில் கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை எடுத்துக் கொள்வர். மேலும் பொது சுகாதாரப் பார்வையிலும் இதுவே சிறந்த நடைமுறையாக இருக்க முடியும்.
ஆகையால், ஓமிக்ரான் தொற்றுக்கு எதிராகவும் போராடக் கூடிய தடுப்பூசியை உருவாக்க நடவடிக்கை முன்னெடுத்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.