பிரான்ஸில் பலரது கவனத்தை ஈர்த்த அதிபர் மக்ரோனின் நியமனம்!
பிரான்ஸில் குடியேற்றம் மற்றும் காலனி ஆதிக்கம் தொடர்பான வரலாற்றாசிரியர் பேயாப்பே என்டியாய் (Pap Ndiaye) எனும் கறுப்பினத்தவர் கல்வி மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆபிரிக்க வம்சாவளியில் செனகல் நாட்டைச் சேர்ந்தவரான 56 வயதுடைய பேயாப்பே என்டியாய் (Pap Ndiaye) நியமனம் நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
செனகல் நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும் பிரெஞ்சுத் தாய்க்கும் மகனாகப் பிறந்த வர் பேயாப்பே என்டியாய். சர்வதேச அளவில் அறியப்படுகின்ற ஒரு வரலாற்று ஆய்வாளரான அபேயாப்பே என்டியாய் (Pap Ndiaye), ஐக்கிய அமெரிக்காவையும் அங்குள்ள சிறுபான்மையினர்களதும் சமூக வரலாற்றையும் ஆய்வுசெய்ததில் நிபுணத்துவம் பெற்றவர் என கூறப்படுகின்றது.
அதோடு பேயாப்பே என்டியாய் (Pap Ndiaye) பாரிஸின் புகழ்பெற்ற “சயன்சஸ் போ”(Sciences Po) பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் பேராசிரியராகவும் பணிபுரிந்தவர். அதிமட்டுமல்லாது பாரிஸில் உள்ள வரலாறு மற்றும் குடியேற்றம் தொடர்பான அருங்காட்சியகத்தின் தலைமைப் பொறுப்பையும் வகித்தவர் பேயாப்பே என்டியாய் (Pap Ndiaye).
இந்நிலையில் அதிபர் மக்ரோன் (Emmanuel Macron) அரசியலுக்கு வெளியே உள்ள துறைசார் புலமையும் திறமையும் வாய்ந்த பிரபலமானவர்களைஅமைச்சரவைக்குள் உள்வாங்குகின்ற கொள்கையைக் கொண்டுள்ளார்.
அந்தவகையில் கடந்த தவணைக் காலத்தில் அவ்வாறு அரசியல் அனுபவம் ஏதுமற்ற பிரபல சட்டத்தரணி எரிக்-டுப்பொன்ட் மொரெட்டியை (Eric-Dupond Moretti) பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நீதி அமைச்சராக நியமித்தார்.
அதேபோன்று இந்தத் தடவை சிறுபான்மைக் கறுப்பினத்தவரான பேயாப்பே என்டியாய் (Pap Ndiaye) கல்வி அமைச்சுக்குப் அதிபர் மக்ரோன் பொறுப்பாக்கியிருக்கிறார்.
எனினும் பேயாப்பே என்டியாய் (Pap Ndiaye) நியமனத்துக்குத் தீவிர வலதுசாரிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அதேசமயம் பிரபல ஆசிரிய தொழிற்சங்கங்கள் பேயாப்பே என்டியாய் (Pap Ndiaye) வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.