வெளிநாடொன்றில் 85 பேருடன் விபத்துக்குள்ளான இராணுவ விமானம்!
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தது 85 பேரைக் கொண்ட இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக அந் நாட்டு ஆயுதப்படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
சுலு மாகாணத்தின் ஜோலோ தீவில் தரையிறங்க முயன்றபோது சி -130 என்ற இராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜனா குறிப்பிட்டுள்ளார்.
இடிபாடுகளில் இருந்து இதுவரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் பதிலளிப்பவர்கள் தற்சமயம் ஸ்தளத்தல் உள்ளனர்.
மேலும் அவர்கள் உயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.
அமெரிக்காவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்த விமானம் கடந்த ஜனவரியில் பிலிப்பைன்ஸ் விமானப் படைக்குள் உள்ளீர்க்கப்பட்டது.