அதிபர் கொலை வழக்கில் கைதானவர் கொரோனாவுக்கு பலி
ஹைதி நாட்டின் முன்னாள் அதிபர் ஜோவேனல் மொய்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் சிறையில் கொரோனா பாதிப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
ஹைதி நாட்டின் அதிபராக இருந்தவர் தான் ஜோவேனல் மொய்ஸ் . இவர் கடந்த ஜூலை மாதம் அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்போது அவரது மனைவி மார்ட்டின் காயங்களுடன் உயிர் தப்பினார்.
இது தொடர்பில் 40 க்கும் அதிகமானோர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். அதில் 18 பேர் கொலம்பியா நாட்டையும், 5 பேர் அமெரிக்க நாட்டையும் சேர்ந்தவர்கள் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் 5 பொலிஸ் அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் கைதானவர்களில் ஒருவர் கில்பர்ட் டிராகன். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இதனையடுத்து திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.