கனடாவில் கொகேய்ன் கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது
கனடாவின் மொண்ட்ரியாலில் கொகேய்ன் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாகாணங்களுக்கு இடையே செயல்பட்டதாக கூறப்படும் கோகைன் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
மாண்ட்ரியால், லாரன்ஷியன் மற்றும் மொண்டெரெஜி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில், டொரொண்டோவில் இருந்து கோகைனை பெற்று கியுபெக்கில் மீள விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் வலையமைப்பை குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கரீம் சப்பி, கத்தரின் ட்ரூடெல்-பிரிமோ, ஜீன்-பிரான்சுவா ரோபெர்ஜ், மனோன் பிரிமோ, மத்யூ போஷார்ட், ஜென்னிபர் டிவ்ரிஸ், மிச்சேல் பிரான்செஸ்கோ மணிகோன் மற்றும் ஜூலி செயிண்ட்-ஜாக்ஸ்-லாபோயிண்ட் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் அனைவரும் 24 முதல் 54 வயதுக்குள் உள்ளிட்டவர்கள் மற்றும் முன்னறிவிக்கப்பட்ட பிடிவிராந்து அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் மொண்ட்ரியால் நீதிமன்றில் முன்னிலையாக உள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.