Huawei ஊழல் தொடர்பில் கைது நடவடிக்கை
பெல்ஜியம் அதிகாரிகள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் Huawei ஊழல் தொடர்பில் சிலரைக் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனத் தொலைத்தொடர்பு நிறுவனமான Huawei ஐரோப்பாவில் அதன் வர்த்தகச் சொத்துகளைப் பெருக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்குக் கையூட்டுக் கொடுத்ததாக பெல்ஜியத்தில் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் சுமார் 100 பொலிஸார் புலன் விசாரணை முன்னெடுத்ததுடன் பிரசல்ஸிலும் (Brussels) போர்ச்சுகலிலும் (Portugal) சோதனைகள் நடத்தப்பட்டன. ஊழல், மோசடி, குற்றக்கும்பல் செயல்பாடு உள்ளிட்ட குற்றங்கள் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதேசமயம் இந்த புலனாய்வு விசாரணையில் ஒத்துழைப்பதாக கூறியுள்ள Huawei குற்றச்சாட்டுகளைக் கடுமையாய் கருதுவதாகக் கூறியது.
அதேவேளை Huawei குறித்து அக்கறை தெரிவித்த ஐரோப்பிய ஆணையப் பேச்சாளர், உறுப்பு நாடுகள் 5G கட்டமைப்பில் Huawei நிறுவனத்தை கட்டுப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.