ஆபத்தான ஆயுதபோட்டியை நோக்கி செல்லும் ஆசியா!
அமெரிக்கா சீனாவை பின்பற்றி ஆசியாவின் சிறிய நாடுகள் விமானங்கள் எவுகணைகளை கொள்வனவு செய்துவருவதால் ஆசியா ஆபத்தான ஆயுதபோட்டியை நோக்கி செல்கின்றது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சீனா தனது டிஎவ்-26 என்ற பலதேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஆயுதத்தை பெருமளவில் உற்பத்தி செய்து வருகின்றது. இந்த ஆயுதம் 4000 கிலோமீற்றர் செல்லக்கூடியது.
இதேவேளை பசுபிக்கில் சீனாவை எதிர்கொள்வதற்கு அமெரிக்கா புதிய ஆயுதங்களை தயாரிக்கின்றது. பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் தங்கள் சொந்த ஏவுகணைகளை உற்பத்தி செய்கின்றன அல்லது கொள்வனவு செய்கின்றன.
சீனாவினால் ஏற்பட்ட பாதுகாப்பு கரிசனைகளும் அமெரிக்காவின் மீது தங்கியிருப்பதை குறைக்கும் நோக்கமும் இதற்கு காரணமாக உள்ளன.
இந்த தசாப்தம் முடிவடைவதற்கு முன்னர் ஆசியா மிகவேகமாக செல்லக்கூடிய மிக கடுமையாக தாக்கக்கூடிய முன்னர் எப்போதையும் விட நவீனமான மரபுவழி ஏவுகணைகளால் நிறைந்து காணப்படப்போகின்றது.
இது கடந்த காலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஆபத்தான சூழ்நிலை என ஆய்வாளர்களும் இராஜதந்திரிகளும் இராணுவ அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.
ஆசியாவின் ஏவுகணை வரைபடம் மாறுகின்றது மிக வேகமாக மாறுகின்றது என்கின்றார் பசுபிக் போரத்தின் தலைவர் டேவிட் சன்டோரோ.
இவ்வாறான ஆயுதங்களை இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடியதாகவு- இவை துல்லியமானவை என தெரிவிக்கும் ஆய்வாளர்கள் சில நாடுகள் அவற்றை கொள்வனவு செய்யும் போது தாங்கள் பின்தங்க விரும்பாததால் அந்த நாடுகளின் அயல்நாடுகளும் அவற்றை கொள்வனவு செய்கின்றன என தெரிவிக்கின்றனர்.
ஏவுகணைகள்எதிரிகளை தடுத்து நிறுத்துவது ,சகாக்களுடனான உறவுகளில்மேல்நிலையில் இருப்பதை உறுதி செய்வது போன்ற மூலோபாய ரீதியில் முக்கியமான விடயங்களை நிறைவேற்றுகின்றன மேலும் மிகவும் அதிகளவு வருமானத்தை தரும் ஏற்றுமதியாகவும் காணப்படுகின்றது.
எனினும் இதன் நீண்ட கால தாக்கங்கள் எவ்வாறு இருக்கும் என்பது தெரியவில்லை என தெரிவிக்கும் சன்டொரோ ஏவுகணைகள் காரணமாக பதற்றங்கள்தணிவதற்கும் அமைதி பேணப்படுவதற்கும் சிறிய வாய்ப்பே உள்ளதுஎனவும் குறிப்பிடுகின்றார்.
அனேகமாக ஏவுகணை போட்டியால் சந்தேகங்கள் அதிகரிக்கப்போகின்றன ஆயுத போட்டி அதிகரிக்கப்போகின்றது இது இறுதியில் மேலும்நெருக்கடிகளையும் மோதல்களையும் உருவாக்கப்போகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள்
சீனா மற்றும் ரஸ்யாவின் கிழக்கு கரையோரப்பகுதிகளில் உள்ள ஜப்பான் தாய்வான் உட்பட ஏனைய பசுபிக் தீவுகளில் புதிய நீண்ட தூர ஆயுதங்களை நிறுத்துவதற்கு யுஎஸ் இந்தோ பசுபிக் கட்டளைப்பீடம் திட்டமிட்டுள்ளது.