காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல்
இஸ்ரேலின் முற்றுகையை முறியடிக்கும் முயற்சியில் காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மால்டாவிற்கு வெளியே உள்ள சர்வதேச கடற்பரப்பில் ட்ரோன்களால் தாக்கப்பட்டதாக, இந்தப் பணியை ஏற்பாடு செய்த குழுவான ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா கூட்டணி (FFC) தெரிவித்துள்ளது.
மால்டாவிலிருந்து 14 கடல் மைல் (25 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள இந்தக் கப்பல், காசாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது இரண்டு ட்ரோன் தாக்குதல்களுக்கு இலக்காகியதாக FFC வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முற்றுகையிடப்பட்ட பகுதிக்கு உதவி வழங்க இந்தக் கப்பல் முயன்று வந்தது.
இஸ்ரேலின் இரண்டு மாத முழுமையான முற்றுகையைத் தொடர்ந்து மக்கள் உயிர்வாழ போராடி வருவதாக உதவி குழுக்கள் எச்சரிக்கின்றன.
ஆயுதமேந்திய ட்ரோன்கள் ஒரு நிராயுதபாணியான சிவிலியன் கப்பலின் முன்பக்கத்தை இரண்டு முறை தாக்கின, இதனால் தீ விபத்து ஏற்பட்டது.
அந்த அறிக்கையில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியதாக நேரடியாகக் குற்றம் சாட்டப்படவில்லை.
இருப்பினும் சர்வதேச கடல் எல்லையில் நமது பொதுமக்கள் கப்பல் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான முற்றுகை மற்றும் குண்டுவீச்சு உள்ளிட்ட சர்வதேச சட்ட மீறல்களுக்கு இஸ்ரேலிய தூதர்கள் வரவழைக்கப்பட்டு பதிலளிக்கப்பட வேண்டும் என்று அது கோரியது.
இந்த ட்ரோன் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.