அவுஸ்திரேலியாவில் 60 பேருக்கு கொரோனா தொற்று
அவுஸ்திரேலியா நாட்டின் இடண்டாவது பெரிய நகரமான விக்டோரியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது.
இதனால், 70 லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்டுள்ள விக்டோரியாவில் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் ஒருவாரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வைரஸ் பரவலை தடுக்க அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
கடந்த சில நாட்களில் அம்மாகாணத்தில் மொத்தம் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே அமலில் உள்ள 7 நாட்கள் ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மேலும் 7 நாட்களுக்கு ஜூன் 10 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக விக்டோரியா மாகாண அரசு தெரிவித்துள்ளது.