சர்வதேச எல்லைகளை திறக்க அவுஸ்திரேலியா முடிவு
18 மாதங்களுக்கு பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் சர்வதேச நாடுகளுக்கான தனது எல்லை கட்டுப்பாடுகளை அவுஸ்திரேலியா தளர்த்தவுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் 18 மாதங்களுக்கு பின்னர் முதல் முறையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை அவுஸ்திரேலியா நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் என கூறப்படுகின்றது.
நியூ சவுத் வேல்ஸ் தொடங்கி, 80 சதவீத தடுப்பூசி விகிதத்தை எட்டிய மாநிலங்களுக்கு அடுத்த மாதம் முதல் சர்வதேச எல்லை மீண்டும் திறக்கப்படும் என அவுஸதிரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ( Scott Morrison) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
இதேவேளை தற்போது குடிமக்கள் மற்றும் விலக்கு உள்ளவர்கள் மட்டுமே அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியும் என்றும் வெளிச்செல்லும் பயணமும் விலக்கு இல்லாமல் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.