இந்தியா தொடர்பில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆஸ்திரேலியா
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வந்த நேரடி பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிஸன் இந்தத் தடையை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா 2 வது அலை உச்சம்பெற்றுள்ள நிலையில் மருந்து,ஆக்சிஜன் தட்டுப்பாடுகளால் உயிரிழப்பும்அதிகரித்துள்ளது.
ஒருநாள் பாதிப்பில் இந்தியா கடந்த ஒரு வாரமாக முதலிடத்தில் தொடர்கிறது. தொற்றின் தீவிர பாதிப்பு காரணமாக, இந்தியாவுடனான விமான சேவைகளை பல நாடுகள் தற்காலிகமாக மீண்டும் நிறுத்திவைத்துள்ளது.
அதன்படி ஹாங்காங், ஈரான், துபாய் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன.
இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பயணிகள் விமான சேவை மே 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.