கொரோனா தடுப்பூசி போட்ட ஆஸ்திரேலிய பெண்னுக்கு ஒரே இரவில் கிடைத்த அதிர்ஷ்டம்! பல கோடிகளுக்கு சொந்தகாரியானது எப்படி?
ஆஸ்திரேலிய நாட்டில், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் செலுத்திக் கொண்டவர்களுக்கு, தி மில்லியன் டாலர் வேக்ஸ் அலையன்ஸ் என்ற பெயரில் ஒரு லாட்டரி போட்டி நடைபெற்றது.
ஆஸ்திரேலிய மக்கள் அதிகளவில் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் போட்டி தொடங்கப்பட்டது. இதில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இதில் வெற்றி பெரும் நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் முடிவுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. அதில் போட்டியின் வெற்றியாளராக 25 வயதான ஜோயன் ஸூ தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் 7.4 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இவருக்கு பரிசாக வழங்கப்படும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள், நன்கொடை மற்றும் கம்பெனிகளிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகளின் மூலம் தரப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.