நோர்வேயை தொடர்ந்து ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியை நிறுத்திய மற்றுமொரு நாடு
ஆஸ்திரியா நாட்டில் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி போட்டு கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியதை அடுத்து அது தொடர்பில் அந்நாட்டு அரசு ஆய்வில் ஈடுபட்டது.
தொடர்ந்து ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு தடை விதித்தது.
இதனையடுத்து, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும்நோர்வே உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் இந்த தடுப்பூசியை தடை செய்தன.
இதற்கு ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி போட்டு கொண்ட முதியவர்களுக்கு ரத்த கட்டு ஏற்படும் பல சம்பவங்கள் தெரிய வந்துள்ளதாக அந்நாடுகள் கவலை தெரிவித்து உள்ளன. இதனால், நோர்வே அரசு கடந்த சனிக்கிழமை தடை விதித்தது.
தொடர்ந்து அயர்லாந்து அரசும் நேற்று இதற்கு தற்காலிக தடை விதித்தது. இந்நிலையில், ரத்த கட்டு சம்பவங்களை
தொடர்ந்து ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டை நெதர்லாந்து அரசும் நிறுத்தி வைத்துள்ளது. இதேவேளை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிறைவடையாத விசாரணை ஆகியவற்றை முன்னிட்டு ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தி வைக்கும்படி டச்சு மருத்துவ வாரியம் அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, மார்ச் 28 ஆம் திகதி வரை அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்த தடுப்பூசி பயன்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் நாட்டின் மிக பெரிய மருந்து விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ஆஸ்டிரா ஜெனிகா கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது.
இதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து நாடுகளில் அந்நிறுவனம் 1.7 கோடி பேரிடம் பரிசோதனை மேற்கொண்டு பாதுகாப்பு தரவுகளை சேகரித்து வைத்துள்ளது.
அதன் அடிப்படையில், ரத்து கட்டு ஏற்படுவதற்கான ஆபத்து பற்றிய எந்த சான்றுகளும் இல்லை என அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.