சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவும் ஆயுர்வேத மருந்து! தொடர்ந்து ஒரு மாதம் குடிச்சு பாருங்க
புற்றுநோய்க்கு அடுத்தப்படியாக உயிரை கொல்லும் நோயாக சர்க்கரை நோய் உள்ளது.
மனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதனை தான் சர்க்கரை நோய் என்கிறோம்.
பரம்பரை வழி, உணவு உண்ணாமல் இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களாலும் இந்தநோய் ஏற்படுகிறது.
உடல் சோர்வு ,அதிக அளவு பசி ,அதிகளவு தாகம் ,அடிக்கடி தலை சுற்றுவது,அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு இதன் அறிகுறிகள் ஆகும்.
இவற்றை ஆரம்பத்திலே கண்டறிந்தால் ஒரு சில இயற்கை பொருட்களை வைத்து கூட விடுபட முடியும்.
அந்தவகையில் தற்போது சர்க்கரை நோயை போக்க கூடிய ஆயுர்வேத வழிமுறை ஒன்றை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- வெண்டைக்காய் - 1/2 கப் (நறுக்கியது)
- இஞ்சி ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்
தயாரிக்கும் முறை
மிக்ஸியில் வெண்டைக்காய் மற்றும் இஞ்சி சாறு சேர்த்து, அத்துடன் சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்து, வடிகட்டினால் ஜூஸ் தயார்.
இந்த ஜூஸை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து குடித்தால், சர்க்கரை நோயின் தீவிரம் குறைந்துவிடும்.
நன்மைகள்
- வெண்டைக்காயில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏராளமாள அளவில் உள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவை சீராக்கி, சர்க்கரை நோயை சரிசெய்ய உதவும்.
-
இஞ்சியில் உள்ள பாலிஃபீனால்கள், இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்கும்.