கனடாவில் நாய்களுடன் வாக்கிங் சென்ற நபருக்கு காத்திருந்த எதிர்பாராத அதிர்ச்சி
கனடாவில் நாய்களுடன் வாக்கிங் சென்ற ஒருவர் மீது திடீரென கரடி ஒன்று பாய்ந்ததால், அவர் அதிர்ச்சிக்குள்ளானார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Shuswap என்ற இடத்தில் தன் நாய்களுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்திருக்கிறார் ஒருவர்.
அப்போது, அவருடைய நாய்களில் ஒன்று புதர்களுக்குள் ஓடியிருக்கிறது. நாயைத் தேடி அவர் புதரை நோக்கிச் செல்ல, புதருக்குள்ளிருந்து அவர் மீது பாய்ந்திருக்கிறது கரடி ஒன்று.
அவரை அந்தக் கரடி கடித்துக் குதற, அவருடைய நாய்களில் ஒன்று, தன் எஜமானனை கரடி தாக்குவதைக் கண்டு கரடி மீது பாய, அந்த நாயையும் கரடி தாக்கியுள்ளது.
நாய்க்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு அபூர்வ நிகழ்வு என்றும், வழக்கமாக கரடிகள் மனிதர்களைத் தாக்குவதில்லை என்றும் கூறியுள்ள வனத்துறை அதிகாரிகள், வாக்கிங் செல்லும்போது சத்தம் எழுப்புவது கரடி தாக்குதல்களை குறைக்க வழிவகுக்கும் என்றும், அதே நேரத்தில், நாய்களை கட்டவிழ்த்து விடுவது கரடிகள் தாக்குவதற்கு வழிவகை செய்யும் என்றும் கூறியுள்ளனர்.