வான்கூவர் நகரில் நடுங்கவைக்கும் 11 மாத குழந்தையின் மரணம்
வான்கூவர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 மாத குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் வான்கூவர் பொலிசார் வெளியிட்ட தகவலில், சம்பவத்தின் போது 31 வயதான நபர் தமது 11 மாத பிஞ்சு குழந்தையுடன் நடைபாதையில் நடந்து சென்றுள்ளார்.
Hornby மற்றும் Smithe வீதிகள் வழியாக நடந்து சென்ற போது, திடீரென்று இரண்டு வாகனங்கள் மோதியுள்ளது. இதில் ஒரு வாகனம் அந்த வேகத்தில் தூக்கி வீசப்பட, துரதிர்ஷ்டவசமாக பிஞ்சு குழந்தையுடன் நடந்து சென்ற அந்த தந்தை மீது மோதியுள்ளது.
இச்சம்பவத்தில் பிஞ்சு குழந்தை பரிதாபமாக மரணமடைந்துள்ளது. அந்த குழந்தையின் தந்தை உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
அவர் காயங்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும், குழந்தை மற்றும் தந்தை மீது மோதிய அந்த வாகனத்தின் சாரதியும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
அவரது நிலை தொடர்பிலும் உறுதுயான தகவல் வெளியாகவில்லை. இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல்களை புதன்கிழமை தெரிவிக்கப்படும் என பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.