பிரித்தானியாவில் 2 வயது சிறுவனிற்கு எமனான வாழைப்பழம்
பிரித்தானியாவின் வேல்ஸில், வாழைப்பழம் சாப்பிட்ட 2 வயது குழந்தை ஒன்று மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில்,
Dylan John James Greig என்ற 2 வயது குழந்தைக்கு அவன் தாயார் Danielle Butterley (30) வாழைப்பழ துண்டை கொடுத்துவிட்டு, பக்கத்து அறைக்கு சென்ற Danielle மீண்டும் Dylan அறைக்கு திரும்பிய போது பெரும் அதிர்ச்சிஅடைந்தார்.
ஏனெனில் வாழைப்பழ துண்டு தொண்டையில் சிக்கிய நிலையில் குழந்தை அவதிப்பட்டு கொண்டிருப்பதை கண்ட Danielle உடனடியாக 999 அவசர உதவி எண்ணுக்கு அழைத்தார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவமானது கடந்த ஜூலை மாதம் நடந்தது, இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் அந்த விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.
Danielle அளித்த வாக்குமூலத்தில், Dylan நிலையை பார்த்த போது ஏதோ தவறு நடந்திருப்பதாக உணர்ந்தேன், அவன் மூச்சுத்திணறுவதை பார்த்தேன். அவசர உதவி குழுவினர் வருவதற்கு முன்னர் Dylanக்கு எப்படி உதவுவது என ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் மூலம் எனக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
மகனின் தொண்டையில் வாழைப்பழ துண்டு சிக்கியிருப்பதை கண்டேன். மருத்துவமனைக்கு Dylan கொண்டு செல்லப்பட்டும் அவனை காப்பாற்ற முடியவில்லை என அவர் கண்ணீருடன் கூறியுள்ளார்.