கனடாவில் மரம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த இளம்பெண் கரடி தாக்கி பலி
கனடாவின் ஆல்பர்ட்டாவில் மரம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கரடியால் கொல்லப்பட்டுள்ளார்.
பெயர் வெளியிடப்படாத அந்த 26 வயது பெண், Swan Hills என்ற பகுதிக்கு அருகே மரம் நடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கரடியால் தாக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ உதவிக்குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையிலும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.
அந்த பகுதியில் மூன்று கரடிகள் நடமாடிக்கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதில் எந்த கரடி அந்த பெண்ணைத் தாக்கியது என்பதை அறிவதற்காக DNA பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.