தாய் நாட்டுக்கே பச்சைத் துரோகம்; சிக்கிய உக்ரைன் பெண்!

Sulokshi
Report this article
உக்ரைனுக்காக போராடுபவர்களின் பெயர்களை, ரஷ்ய ஊடுருவல்காரர்களுக்கு இரகசியமாக கொடுத்து வந்த நபர் ஒருவரை உக்ரைன் இரகசிய உளவுத்துறை ஏஜண்டுகள் கைது செய்துள்ளனர்.
உக்ரைனிலுள்ள Kharkiv நகருக்கு அருகில் அமைந்திருக்கும் Kutuzivka என்ற கிராமத்தில் உள்ள அலுவலகம் ஒன்றிற்குள் அதிரடியாக நுழைந்த இரகசிய உளவுத்துறை ஏஜண்டுகள் மற்றும் உக்ரைன் சிறப்புப் படையினர், Nadiya Antonova என்ற பெண்ணை கைது செய்துள்ளார்கள்.
உள்ளூர் கவுன்சில் செயலரான அப் பெண், தன் நாட்டுக்கு துரோகம் செய்து, ரஷ்ய ஊடுருவல்காரகளுக்கு உக்ரைன் பொலிசார், இராணுவ வீரர்கள், தீவிரவாத எதிர்ப்பு நிபுணர்கள், உள்ளூர் வேட்டைக்காரர்கள், காடுகளைப் பற்றி நன்கறிந்த வனத்துறையினர் ஆகியோரின் அடையாளங்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், தன் கிராம மக்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக அவர்கள் அணியக்கூடிய வெள்ளைப் பட்டைகளை அணியவேண்டும் என்றும் Antonova கட்டாயப்படுத்தியுள்ளார்.
அந்த கிராமத்தை ரஷ்யப் படைகளிடம் இருந்து உக்ரைன் வீரர்கள் மீட்டதும் அங்கு அதிரடியாக நுழைந்த உக்ரைன் சிறப்புப் படையினர், அரசு கட்டிடம் ஒன்றிற்குள் பதுங்கியிருந்த Antonovaவைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் சொந்த நாட்டுக்கு துரோகம் செய்ததற்காக Antonova இற்கு உகரைன் இராணுவச் சட்டப்படி ஆயுள் தண்டனை விதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.


