ரஷ்ய பெண்களுடன் தொடர்பு இருந்தது, அதிர்ச்சி கொடுத்த பில்கேட்ஸின் கருத்து ; எப்ஸ்டீன் கோப்புகள்
கடந்த பல நாட்களாகவே எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தொடர்பான பல புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உலக நாடுகளிடம் பரபரப்பை எற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த எப்ஸ்டீன் 30 வருடங்களுக்கு முன்பு இரண்டு பெரிய தீவுகளை வாங்கி அங்கே சிறுமிகளை வரவழைத்து பெரும் பணக்காரர்கள் உல்லாசமாக இருக்க உதவி செய்தார் என சொல்லப்படுகிறது.
இவருடன் அமெரிக்கா டொனால்ட் ட்ரம்ப், உலகப் பணக்காரார்களில் ஒருவரான பில் கேட்ஸ், மறைந்த பாடகர் மைக்கேல் ஜாக்சன் என பலரும் தொடர்பில் இருந்தனர். எப்ஸ்டீன் பல வருடங்களுக்கு முன்பே அமெரிக்கா சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒரு நாள் அறையில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்நிலையில், எப்ஸ்டீன் ஃபைல்ஸ் என்கிற பெயரில் எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

இது தொடர்பாக விளக்கமளித்த டொனால்ட் டிரம்ப் எனக்கும் எப்ஸ்டீனுக்கும் இருந்த தொடர்பு எப்போதே முறிந்துவிட்டது என்று சொன்னர். அதேபோல், இதுபற்றி விளக்கமளித்த பில்கேட்ஸ் '‘எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்துக்கொண்டதற்காக வருத்தப்படுகிறேன். அவருடன் பேசியிருக்கிறேன். ஆனால், தீவுக்கு சென்றதில்லை’ என கூறியிருந்தார்.
அதன்பின் ஹெலிகாப்டரில் எப்ஸ்டீன் மற்றும் பில்கேட்ஸ் அமர்ந்திருக்க அருகே இரண்டு ரஷ்ய பெண்கள் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. இது தொடர்பாக விளக்கமளித்த பில்கேட்ஸ் ‘அந்த இரு பெண்களுடன் தொடர்பு இருந்தது. ஆனால், குற்றச்செயல்கள் எதுவும் நடக்கவில்லை.
எப்ஸ்டீனுடன் பழகியது மிகப்பெரிய தவறு. எனது செயல்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனாலும், எந்த குற்றத்திலும் என்னுடைய பங்கு இல்லை’ என கூறியிருக்கிறார்.