புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் ஆணைய அலுவலர் கருப்பினப்பெண்ணைப் பார்த்து கூறிய அந்த வார்த்தை
கனடாவின் ஒன்ராறியோவில், புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் ஆணைய அலுவலராக பணியாற்றிய ஒருவரே, கருப்பினப் பெண் ஒருவரை இனரீதியாக விமர்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பெடரல் அலுவலராக அதே அலுவலகத்தில் 30 ஆண்டுகளக பணியாற்றிவரும் Monica Agard என்ற பெண் தன் சக ஊழியர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த வழியாக வந்த மூத்த அலுவலர் ஒருவர், நமக்கு அடிமைகள் இருந்த அந்த அருமையான பழங்காலத்துக்கு மீண்டும் செல்லவேண்டும் போலிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
அதைக் கேட்டு திடுக்கிட்ட Monica, நில்லுங்கள் இல்லையென்றால் உங்கள் மீது புகார் தெரிவிக்கவேண்டியிருக்கும் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு அந்த அலுவலர், உங்கள் ஆட்கள் மட்டுமே அடிமைகளாக இருக்கவில்லை என்று மீண்டும் கூறியிருக்கிறார். புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் ஆணையத்திலேயே இப்படி நடப்பதால், தனக்கு ஆணையத்தின்மீது நம்பிக்கை போய்விட்டதாக கூறும் Monica, தான் உடனே மேலிடத்தில் புகார் தெரிவிக்கவில்லை என்கிறார்.
ஆனால், இனரீதியாக விமர்சித்த அதே அலுவலரே தனக்கு நேரடியான மேலதிகாரியாக நியமிக்கப்படவே, அதற்கு பிறகே இந்த பிரச்சினையை வெளிக்கொணர்ந்திருக்கிறார் Monica. இனவெறுப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறியுள்ள புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் ஆணையம், புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது