விபத்தில் சிக்கிய படகுகள்... வெளியான 6 பேர்கள் நிலை
ஒன்ராறியோவில் Muskoka பகுதியில் அமைந்துள்ள ஏரியில் இரு படகுகள் மோதிய விபத்தில் ஒருவர் மரணமடைந்ததுடன் நால்வர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
Muskoka பகுதியில் அமைந்துள்ள Rosseau ஏரியிலேயே புதன்கிழமை சுமார் 7.30 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் மற்றும் மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கிய நால்வரை மீட்டுள்ளதுடன், ஒருவரை சடலமாக கண்டெடுத்துள்ளனர்.
இன்னொருவரை தேடும் பணி நடந்து வருகிறது. இரு படகுகளில் மொத்தம் 6 பேர்கள் பயணித்ததாக தெரிய வந்துள்ளது.
காயங்களுடன் மீட்கப்பட்ட நால்வரையும் ரொறன்ரோ பகுதி மருத்துவமனைகளுக்கு ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாயமான ஒருவரை தேடும் பணி வியாழக்கிழமை தொடரும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகுகள் விபத்துக்குள்ளான காரணம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.