ஆற்றில் தீப்பற்றி எரிந்த படகு ; 32 பேர் பரிதாப உயிரிழப்பு
வங்கதேசத்தில் ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணம் செய்த 32 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் தலைநகர் டாகாவில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜகாகாதி பகுதியில் நேர்ந்துள்ளது. எம்வி அபிஜான் 10 என பெயரிடப்பட்ட மூன்று அடுக்குகள் கொண்ட படகு 100க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது.
நடு ஆற்றில் சென்று கொண்டிருந்தபோது இன்ஜினில் தீப்பற்றி படகு முழுவதும் பரவிய நிலையில் தீயில் இருந்து தப்பிக்க பலர் ஆற்றில் குதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இதுவரை 32 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்றும் ஜகாகாதி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

