எதிர்பாராத விபத்து! ஆற்றுக்குள் மூழ்கிய காரிலிருந்து தந்தை- மகன் சடலமாக மீட்பு
கனடாவின் கியூபெக் மாகாண ஆற்றிலிருந்து தந்தை மற்றும் மகன் சடலமாக மீட்கப்பட்ட துயர் மிகு சம்பவம் நடந்துள்ளது.
St-Michel-des-Saints பகுதியிலிருந்து Jonas Dubé(வயது 29) மற்றும் அவரது மகன் Weyko Jacob(வயது 7) ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
கடந்த புதனன்று உள்ளூர் நேரப்படி 1 மணியளவில் கார் ஒன்று சாலையிலிருந்து தடுமாறு ஆற்றுக்குள் விழுந்துவிட்டதாக, நபர் ஒருவர் போலீசுக்கு தகவல் அளித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து விரைந்து வந்த அதிகாரிகள், மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர், இதன்போதே தந்தை மற்றும் மகனின் சடலம் மீட்கப்பட்டது.
கடந்த செவ்வாய் இரவிலிருந்து இவர்கள் இருவரும் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் வழக்குபதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.