பெலாரஸ் - லித்துவேனியா எல்லையில் இலங்கையரின் சடலம்
பெலாரஸ் - லித்துவேனியா எல்லையில் 29 வயதான இலங்கையர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த இலங்கை பிரஜையின் உடல் வித்துவேனியாவின் எல்லையில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள புதர்களுக்கு மத்தியில் கடந்த 5 ஆம் திகதி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் இலங்கையை சேர்ந்த 29 வயதானவர் என்றும், அவரது கையடக்க தொலைபேசி, வங்கி அட்டைகள் மற்றும் ஆவணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். பெலாரஸில் இருந்து சட்டவிரோதமாக செல்ல முயன்ற குடியேற்றவாசிகளை லித்துவேனிய பாதுகாப்பு படையினர் பல முறை தடுத்துள்ளனர்.
இந்நிலையில் அவ்வாறு செல்ல முயற்சித்த குழுவில் குறித்த இலங்கை பிரஜையும் இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. இது குறித்து விசாரணைகளை நடத்தி வருவதாக போலோட்ஸ்க் எல்லைக்குழுவின் உத்தியோகபூர்வ பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
அதோடு குறித்த குழுவினரும், புலனாய்வாளர்களுக்கும் உள்ளூர்வாசிகளிடம் விசாரணைகளை நடத்தியுள்ளதுடன் இலங்கை நபரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய தடயவியல் பரிசோதனைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.