கடற்கரையில் மீட்கப்பட்ட எல்லே வீரரின் சடலம்: கைதான லெப்டினன் கேர்ணல்
கொழும்பு - பாலத்துறை ' அருண' எல்லே விளையாட்டுக் கழகத் தலைவர் அகில சம்பத் ரத்னசிறி மட்டக்குளி - காக்கை தீவு கடற் கரையில், கரை ஒதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த படுகொலையை வழிநடாத்தியதாக கூறப்படும் மட்டக்குளி இராணுவ முகாமின் கட்டளைத் தல அதிகாரியாக செயற்பட்ட ஆர்.எம். தனுஜ சமந்த திலகரத்ன எனும் லெப்டினன் கேர்ணலே கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்துள்ளனர்.
நாளை தினம் வரை அவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் டி.ஜே பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இவ்விகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் கோப்ரல் உட்பட 15 பேரினதும் விளக்கமறியல் காலமும் நாளை முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலையானது புலனாய்வு பிரிவின் கோபரல் மற்றும் கிராமசேவகரான பெண்ணுக்கிடையே நிலவிய தகாத உறவின் காரணமாகவே இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.
எல்லே வீரர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொன்டிருந்த போது, இரானுவ கெப் வாகங்களில் பயணித்த சந்தேக நபர்கள் அவரைக் கடத்தி சித்திரவதை செய்து கொலைச் செய்த பின்னர் களனி கங்கையில் சடலத்தை வீசியுள்ளனர்.
மேலும் இதுதொடர்பில் கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரமவுக்கும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிவான் நீதிமன்ற விசாரணைகளும் இடம்பெற்றது.
இதேவேளை இக்கொலை சம்பவம் தொடர்பில் 16 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.