இலங்கையில் ஜனாதிபதி மாளிகையின் இரகசிய அறையில் மீட்கப்பட்ட கட்டுக்கட்டாக பணம்
இலங்கை ஜனாதிபதி மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ஆரப்பாட்டக்காரர்கள் விடிய விடிய அங்கேயே தங்கி இருந்தனர்.
இன்று காலை (10-07-2022) அங்குள்ள குளியல் அறைகளிலும், நீச்சல் குளத்திலும் குளித்து மகிழ்ந்தனர். அதன்பிறகு அவர்களுக்கு காலை உணவு ஜனாதிபதி மாளிகைக்கு உள்ளே வழங்கப்பட்டது.
இதையடுத்து ஆரப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தனர். பெரும்பாலானவர்கள் அதிபர் மாளிகை அரங்குகளுக்குள் தரையில் சொகுசாக படுத்துக்கொண்டு தொலைக்காட்சியை பார்த்தபடி இருந்தனர்.
சிலர் ஜனாதிபதி மாளிகையில் என்னென்ன வசதிகள் இருப்பது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ජනාධිපති මන්දිරයේ තිබී අරගලකරුවන් පොලිසියට බාර දුන් මුදල් ගැනයි
— Shehan Madawa ?? (@shehanmlive) July 10, 2022
ජනාධිපති මන්දිරයේ ගෝඨාභය රාජපක්ෂ භාවිත කළ කාමරයක සඟවා තිබුණු බව කියන රුපියල් එක්කෝටි හැත්තෑ අට ලක්ෂ පනස් දහසකට ආසන්න මුදලක් අරගලකරුවන් පිරිසක් විසින් ගණන් කර පොලිසිය බාර දෙනු ලැබ ඇත. pic.twitter.com/hGz4Vwj2S7
அப்போதுதான் ஜனாதிபதி மாளிகைக்குள் சுரங்க அறைகள் இருப்பது தெரியவந்தது. அந்த சுரங்க அறைகள் நவீன வசதிகளுடன் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே ஜனாதிபதி மாளிகையின் சில அறைகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை உடைத்து திறந்து பார்த்தனர்.
அந்த அறைகளுக்குள் நகைகளும், பணமும் இருந்தன. ஒரு அறையில் கட்டுக் கட்டாக இலங்கை ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) குடும்பத்தினர் ரூபாய் நோட்டுக்களை அந்த அறைக்குள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
ஆர்ப்பாட்டக்காரர்களால் சுமார் 17,850,000 ரூபா மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பணத்தை பாதுகாப்பு படையினர் வசம் ஒப்படைக்கப்பட்டதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஊடகம் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது.